கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத் தில் 1983 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று நிறுவப்பட்ட மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் (எம்.ஜி.பல்கலைக்கழகம்), கேரளத்தின் நான்கு மாநிலப் பல்கலைக்கழ கங்களில் ஒன்றாகும். ‘நாக்’ (NAAC) கமிட்டி யால் ஏ++ (A++) தரச்சான்று பெற்ற இப்பல்கலைக் கழகம் தேசிய அளவில் சிறந்த இளம் பல்கலைக் கழகமாகத் திகழ்கிறது. உலகின் பல்வேறு நாடு களிலிருந்து வரும் மாணவர்கள் பயில்வதற் கேற்ற வகையில் அனைத்து அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மாநில அரசின் உதவித்தொகை யுடன், பன்னாட்டு மாணவர்களுக்கும் சிறப்புக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உயரிய ஜனநாயகச் சூழல்
பல்கலைக்கழகத்தில் நிலவும் ஜனநாயகச் சூழல் மாணவர்களிடையே உயர்வான பண்பாட்டுச் சூழலை வளர்க்கிறது. குறிப்பாக ஆசிரியர்-மாணவர் இடையே உயிரோட்டமான நட்புணர்வு மேலோங்கியுள்ளது. கேரள மாநிலத்தின் அனைத்துக் கல்வி நிறுவனங் களிலும் மாணவர் பேரவைத் தேர்தல் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. எம்.ஜி பல்கலைக்கழ கத்திலும் வருடந்தோறும் டிசம்பர் மாதத்தில் இத்தேர்தல் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஜனநாயக உரிமை மூலம் மாணவர் நலன் பாதுகாக்கப்படுவதுடன், கல்வியும் அரசியல் விழிப்புணர்வும் ஒருங்கி ணைந்து பல்கலைக்கழக வளர்ச்சிக்கு வழிவகுக் கிறது.
பல்வேறு மாணவர் இயக்கங்கள் தங்கள் கொள்கை நிலைப்பாடுகளுடன் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், பிரட்டர்னிட்டி மூவ்மென்ட் போன்றவை மத அடிப்படையிலான அணுகு முறையையும், கேரள ஸ்டூடன்ட்ஸ் யூனியன் மொழி அடிப்படையிலான சந்தர்ப்பவாதத்தை யும் முன்வைக்கின்றன. ஆல் இந்தியா ஸ்டூட ன்ட்ஸ் பெடரேஷன் (ஏஐஎஸ்எப்) இடதுசாரி அரசியலை பொதுவாக முன்வைக்கிறது. இவற்றிலிருந்து வேறுபட்டு இந்திய மாணவர் சங்கம் (SFI) “சுதந்திரம், ஜனநாயகம், சோச லிசம்” என்ற முழக்கத்துடன் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமையை வலி யுறுத்துகிறது.
கல்வி வளாக அரசியலின் உயர்வடிவம்
தேர்தல் நடைமுறையில் 18 முக்கிய பதவி களுக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். துறைக்கான தனி மாணவர் பிரதி நிதிகள், மாணவப் பொதுச்செயலாளர், மாண வத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மனுத்தாக் கல் நடைபெறுகிறது. மாணவர் இயக்கங்கள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்திய பின், வகுப்ப றை அளவிலான பிரச்சாரங்கள் தொடங்கு கின்றன. கடந்த கால சாதனைகள், எதிர்கால திட்டங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறு கின்றன. மாணவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை வெளி யிடப்படுகிறது. வளாகம் முழுவதும் சுவரொட்டி கள், கலை வடிவங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் உற்சாகமாக நடைபெறுகிறது.
வெற்றி பெறும் மாணவர் பிரதிநிதிகள் பல்கலைக்கழக நிர்வாகக் குழுக்களான சிண்டிகேட், செனட், புகார் கமிட்டி போன்ற வற்றில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்ற னர். இவர்கள் மாணவர் நலன் மற்றும் பல்கலை கழக வளர்ச்சிக்கான முடிவுகளில் பங்கேற் கின்றனர். மாணவர் பேரவை கல்வி வளாகப் பிரச்சனைகளில் தலையிடுவது, பாதுகாப்பான சூழலை உருவாக்குவது, மாணவர் உரிமை களைப் பாதுகாப்பது போன்ற பொறுப்புகளை ஏற்கிறது. மேலும் தேசிய அளவிலான திரைப் பட விழா, ஆண்டு விழா, விடுதி விழா, ஓணம் பண்டிகை போன்ற கலாச்சார நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்கிறது.
எம்.ஜி பல்கலைக்கழகத்தின் மாணவர் அரசியலில் இந்திய மாணவர் சங்கம் (SFI) முக்கியப் பங்காற்றுகிறது. மாணவர்களை அரசியல் புரிதலுடன் அணிதிரட்டி, அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறது. 24 மணி நேர படிப்பறை, அவசரகால வாகன சேவை, பசுமை வளாகம், மின்சார வாகன சார்ஜிங் நிலையம் போன்ற பல முக்கிய வசதிகளை மாணவர்களுக்காக வென்றெடுத்துள்ளது.
இந்திய மாணவர் சங்கத்தின் மகத்தான வெற்றி
2024 டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தல் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது. இந்திய மாணவர் சங்கத்திற்கு எதிராக ‘சகோதரத்துவ இயக்கம்’ என்ற பெயரில் களமிறங்கிய ‘பிரட்ட ர்னிட்டி மூவ்மென்ட்’ அமைப்பு வகுப்புவாத அர சியலை முன்னெடுத்தது. ஆனால் மாண வர்கள் வகுப்புவாதத்தை முற்றிலுமாக நிராக ரித்து, 18 இடங்களிலும் இந்திய மாணவர் சங்கத் திற்கு வெற்றியளித்தனர். இது பல்கலைக்கழக வளாகத்தில் ஜனநாயகமும் சுதந்திரமும் வேரூ ன்றியுள்ளதற்கான சான்றாக அமைந்தது.
பாராட்டுக்குரிய கேரள அரசு
இந்தியாவின் எதிர்கால அரசியலை வடி வமைப்பதில் மாணவர்களின் பங்கு முக்கிய மானது. தற்போதைய சூழலில் மாணவர் களுக்கு எதிரான கொள்கைகள் கேள்வியின்றி நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மாணவர் களிடையே சாதி-மத அடிப்படையிலான பிளவு கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்நிலை யில், கேரள மாநில அரசு முன்னெடுத்துள்ள மாணவர் பேரவைத் தேர்தல் முறை பாராட்டுக் குரியது. இம்முறை மாணவர்களுக்கு கல்வி அறிவுடன் அரசியல் புரிதலையும் வழங்கி, கல்வி நிர்வாகத்தில் அவர்களுக்கான பிரதி நிதித்துவத்தை உறுதி செய்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவ னங்களில் இத்தகைய ஜனநாயக முறையி லான மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடை முறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று, உழைக்கும் மக்களின் நலனுக்காகக் குரல் கொடுக்கும் தலைவர்களாக உருவாவர். வகுப்பறையிலிருந்து தொடங்கும் இந்த ஜன நாயகப் பயணம், பணநாயகத்தை முறி யடித்து உண்மையான மக்களாட்சியை நிலை நாட்ட வழிவகுக்கும். எனவே தமிழ்நாடு அரசு உட்பட அனைத்து மாநில அரசுகளும் மாணவர் பேரவைத் தேர்தலை ஊக்குவிக்க முன்வர வேண்டும்.
மா.அருண்
மகாத்மா காந்தி பல்கலைக்கழக மாணவர்,
SFI தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர்.